பொள்ளாச்சியில் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கக் கூட்டம்: தனியார்மயக் கொள்கையை கைவிட வலியுறுத்தல்

பொள்ளாச்சியில் நடைபெற்ற நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கக் கூட்டத்தில், தமிழக அரசின் தனியார்மயக் கொள்கையால் கிராமப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்று எச்சரித்து, அக்கொள்கையை கைவிட வலியுறுத்தப்பட்டது.


Coimbatore: பொள்ளாச்சியில் உள்ள வங்கி ஊழியர் சங்கக் கட்டிடத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், செப்டம்பர் 17ஆம் தேதி சங்கத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்படவுள்ளதாகவும், அதனை ஒன்பதாவது மாநில பிரதிநிதித்துவ பேரவை சிறப்பு மாநில மாநாடாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தைத் தொடர்ந்து, சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர், தமிழக அரசின் தவறான தனியார்மயக் கொள்கை காரணமாக தனியார் நிறுவனங்கள் சுங்க வசூலில் ஈடுபட வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் 3,500 சாலைப் பணியாளர் பணியிடங்கள் ஒழிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.



"கிராமப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் என்பதால், மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். மேலும், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி செயல்படுத்த வேண்டும்" என்று அம்சராஜ் வலியுறுத்தினார்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆகஸ்ட் 19ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாகவும், செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் சங்கத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழா மாநாட்டில் சாலைப் பணியாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்துவதாகவும் அம்சராஜ் தெரிவித்தார்.

Newsletter

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...