பொள்ளாச்சி காவல் நிலையத்தில் மதுபோதையில் தகராறு செய்த நபர் கைது

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் மதுபோதையில் மாணவிகளை அச்சுறுத்திய நபர், காவல் நிலையத்தில் DSP முன்னிலையில் தகராறு செய்து கைது செய்யப்பட்டார்.


Coimbatore: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே மதுபோதையில் இருந்த வாலிபர் ஒருவர், அவ்வழியாக வரும் மாணவிகளை அச்சுறுத்தி வந்துள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மகாலிங்கபுரம் போலீசார், அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது மகாலிங்கபுரம் காவல்நிலையத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) ஜெய்ச்சந்திரன் உள்ளிட்ட காவலர்கள் இருந்தனர்.



போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அந்த நபர், சட்டை இல்லாமல் "என்னை அடிங்க... அடிங்க.... என்னை ஒன்றும் செய்ய முடியாது" என ரகளையில் ஈடுபட்டு, கையில் கிடைத்த பொருளை தூக்கி வீசி தகராறில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குடிமகனின் செயலைக் கண்டு செய்வதறியாது திகைத்து நின்ற போலீசார், ஒரு வழியாக அவரை காவல் நிலையத்துக்குள் அழைத்துச் சென்றனர். அங்கிருந்த பொதுமக்கள், "என்னதான் மதுபோதையில் இருந்தாலும் காவல் நிலையத்துக்குள்ளேயே இப்படியொரு அலப்பரியா..." என முகம் சுழித்து சென்றனர்.

விசாரணையில் இந்த நபர் நந்தனார் காலனியைச் சேர்ந்த மணிகண்டன் என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...