உடுமலைப் பகுதியில் பூமி லட்சுமி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் லட்சார்ச்சனை: பக்தர்கள் திரளாக பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறுஞ்சேரி ஊராட்சியில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு பூமி லட்சுமி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் இரண்டு நாள் லட்சார்ச்சனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறுஞ்சேரி ஊராட்சியில் உள்ள பூமி லட்சுமி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு இரண்டு நாள் லட்சார்ச்சனை நடைபெற்றது. மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும், அனைவரும் நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ வேண்டியும் இந்த லட்சார்ச்சனை நடத்தப்பட்டது.

லட்சார்ச்சனையில் இருபதுக்கு மேற்பட்ட அர்ச்சகர்கள் பங்கேற்றனர். ரோஜா, துளசி, சம்பங்கி பூக்கள் மூலம் வேத மந்திரங்களுடன் லட்சார்ச்சனை செய்யப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட பூமி லட்சுமி ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.



முதல் நாள் லட்சார்ச்சனை, உபசாரம், சாற்றுமுறை நிறைவு பெற்ற பின் அம்மனுக்கு சிறப்பு மலர் அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

இதற்கிடையில் முக்கிய நிகழ்வாக வருகின்ற ஆகஸ்ட் 7ஆம் தேதி புதன்கிழமை ஸ்ரீ ரங்க மன்னார் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...