கோவை விமான நிலைய விரிவாக்கம் குறித்து பேச முதல்வரிடம் நேரம் கேட்டுள்ளேன் - எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

கோவை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற தமிழ் புதல்வன் திட்ட துவக்க விழாவில் முதல்வர் ஸ்டாலினுடன் பேசிய எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், கோவை விமான நிலைய விரிவாக்கம் மற்றும் தொகுதி உட்கட்டமைப்பு குறித்து விவாதிக்க நேரம் கோரியுள்ளார்.


Coimbatore: கோவை அரசு கலைக்கல்லூரியில் இன்று நடைபெற்ற தமிழ் புதல்வன் திட்டம் துவக்க விழாவில், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். விழா மேடையில் வானதி சீனிவாசனுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர் கிளம்பிய முதலமைச்சர், வானதி சீனிவாசனை பார்த்தவுடன் அவருடன் சிறிது நேரம் மேடையில் பேசினார்.

இது குறித்து வானதி சீனிவாசனிடம் கேட்டபோது, "தமிழ்ப்புதல்வன் நிகழ்வில் பங்கேற்றதற்கு முதல்வர் தனக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் எனவும், இந்த கல்லூரி தன்னுடைய தொகுதியில் வருகின்றது என அவரிடம் தெரிவித்ததாக கூறினார். மேலும் கோவை விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாகவும், கோவை தெற்கு தொகுதி உட்கட்டமைப்பு தொடர்பாகவும் நேரில் பேச நேரம் ஒதுக்க முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்ததாகவும், அவர் கண்டிப்பாக பேசலாம் என்று தெரிவித்தாகவும் கூறினார்.

மேலும், வரும் 18 ஆம் தேதி "கலைஞர்" நாணயம் வெளியிட்டு விழாவில் பங்கேற்க வேண்டும் என முதல்வர் தனக்கு அழைப்பு விடுத்தார் எனவும், அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர், நீங்களும் பங்கேற்க வேண்டும் என முதல்வர் தன்னிடம் சொன்னதாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...