கோவை கூடலூரில் மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் தொடர்பு முகாம்: 184 பயனாளிகளுக்கு ரூ.6.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

கோவை கூடலூரில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. 184 பயனாளிகளுக்கு ரூ.6.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பல்வேறு துறைகளின் கண்காட்சிகளும் இடம்பெற்றன.


Coimbatore: கோவை கூடலூர் நகராட்சி கேஸ் கம்பெனி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் அனைவரையும் வரவேற்று பேசினார். கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு வாழ்த்துரை வழங்கினார்.

கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையேற்று மருத்துவத்துறை, தோட்டக்கலை, மகளிர் சுய உதவிக்குழுவினர், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட பல்வேறு துறைகள் அமைத்திருந்த கண்காட்சிகளை பார்வையிட்டார்.



நிகழ்வில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் முன்னிலை வகித்து பேசினார். அவர் தனது உரையில், கூடலூர் உள்ளிட்ட கோவை மாவட்டத்தின் பல கிராமங்கள் மலையிட பாதுகாப்பு குழும கட்டுப்பாட்டில் உள்ளதால் (அ கா - கிராமங்கள்) அங்குள்ள இடங்கள் மற்றும் வீடுகளை வாங்கவோ, விற்கவோ முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுவதாகக் கூறினார். இந்த நிலையை மாற்றி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி பேசுகையில், மலையடிவாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்காக வீட்டுவசதி துறை அமைச்சர் ஒரு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், 300 சதுர அடி வரை வீடு கட்ட தற்போது அ.கா தேவையில்லை என்றும் குறிப்பிட்டார். கோவையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் வருகைப் பதிவு 90 சதவீதமாக உள்ளதை குறைந்தது 95 சதவீதமாக உயர்த்த பெற்றோர்கள் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நிகழ்வில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இவற்றில் வருவாய் துறையின் இலவச வீட்டுமனை பட்டா, ஆதி திராவிடர் நலத்துறையின் தனிநபர் வன அலுவலக உரிமை பட்டா, தையல் எந்திரம், குடும்ப அட்டை, மகளிர் திட்டத்தின் கீழ் சுய உதவி குழுவினருக்கான உதவிகள், தோட்டக்கலை மற்றும் வேளாண்மை துறை மானியங்கள், முதலமைச்சர் காப்பீட்டு திட்டம், மகப்பேறு கால ஊட்டச்சத்து பெட்டகம் ஆகியவை அடங்கும். மொத்தம் 184 பயனாளிகளுக்கு சுமார் ரூபாய் 6 கோடியே 10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்வின் முடிவில், மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்த நிகழ்வில் கூடலூர் நகராட்சி ஆணையாளர் மனோகரன் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.

Newsletter

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...