கோவை புரானியில் 78வது சுதந்திர தின விழா: திமுக செயலாளர் நா.கார்த்திக் தேசியக் கொடியேற்றினார்

கோவை புரானி காலனியில் 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திமுக செயலாளர் நா.கார்த்திக் தேசியக் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். பல்வேறு சமூக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோவை புரானி காலனியில் உள்ள "மஸ்ஜித் உல் குத்பி" புரானி-தாவூதி போரா ஜமாஅத் அசோசியேசன் சார்பில் 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வு 2024 ஆகஸ்ட் 15 அன்று காலை 7.30 மணியளவில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்.எல்.ஏ.), தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அவர் தனது சிறப்புரையில், அனைவருக்கும் 78வது சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.



இந்நிகழ்ச்சியில் கோவை புரானி தவூதிபோரா அசோசியேசன் சங்க நிர்வாகிகள் தலைவர் ஷேக் மோயிஸ் காட்டாவாலா, பி.ஆர். செயலாளர் அலி அஸ்கர், பி.ஜி.ஐ.கேப்டன் ஹூசேபா ஆகியோர் தலைமை வகித்தனர்.

மேலும், 27வது வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால், மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் இரா.தனபால், 27வது வார்டு துணைச் செயலாளர் அ. செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



வட்டப் பிரதிநிதிகள் வேலுச்சாமி, ரமேஷ் குமார், மாநகர் மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் லோகேஸ்வரி, கழக மூத்த முன்னோடிகள் கிருஷ்ணமூர்த்தி, கங்குவார் சீனு, எல் எம் டபிள்யூ சீனு, புருஷோத்தமன், அக்பரலி, நடேசன், தேசிங்கு ராஜன் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

திமுக மகளிர் அணியைச் சேர்ந்த திலகவதி, அன்பரசி, விஜயகுமாரி, விஜயா உள்ளிட்டோரும், புரானி-தாவூதிபோரா அசோசியேசன் நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் மற்றும் தாவூதிபோரா இஸ்லாமிய பொதுமக்கள் பலரும் இந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...