உடுமலையில் 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாஜக சார்பில் வாகன பேரணி

உடுமலையில் 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நகர பாஜக சார்பில் வாகன பேரணி நடைபெற்றது. காந்தி மற்றும் காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பல்வேறு பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நகர பாஜக சார்பில் வாகன பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்வு பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்கவும், மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி ஆகியோரின் அறிவுரைப்படியும் ஏற்பாடு செய்யப்பட்டது.



குட்டைதிடல் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு நகரத் தலைவர் கண்ணாயிரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



பின்னர், மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி கந்தசாமி வாகன பேரணியை துவக்கி வைத்தார்.



பேரணி குட்டைதிடலில் துவங்கி, சதாசிவம் வீதி, நெல்லுக்கடை வீதி, பொள்ளாச்சி ரோடு வழியாக சென்றது.



பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.



பின்னர் தளி ரோடு ரயில்வே மேம்பாலம் வழியாக மீண்டும் குட்டைதிடலில் பேரணி நிறைவடைந்தது.

இந்த நிகழ்வில் மாவட்ட வழக்கறிஞர் பார்வையாளர் பி என் ராஜேந்திரன், பொதுச் செயலாளர் ராதிகா, நகர பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், தம்பிதுரை, மாவட்ட பிரச்சார அணி செயலாளர் சின்ராஜ், நகரத் துணைத் தலைவர் உமா குப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், நகர செயலாளர்கள், இளைஞரணி நிர்வாகிகள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், வார்டு செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...