கோவை இடுக்கண் குடி மாரியம்மன் கோவிலில் ஆறரை லட்சம் ரூபாய் மற்றும் நவதானியங்களால் சிறப்பு அலங்காரம்

கோவை இடுக்கண் குடி மாரியம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஆறரை லட்சம் ரூபாய் மற்றும் நவதானியங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் காணிக்கையாக பெறப்பட்ட பணம் மறுநாள் திருப்பி அளிக்கப்படும்.



Coimbatore: கோவை தாமஸ் வீதியில் அமைந்துள்ள இடுக்கண் குடி மாரியம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கோவில் கருவறை முழுவதும் ஆறரை லட்சம் ரூபாய் பணத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அம்மன் வீற்றிருக்கும் வாகனமான அன்னபட்சி முழுவதும் நவதானியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு அலங்காரம் பக்தர்களை கவர்ந்துள்ளது.



ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தின் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவில் நிர்வாகிகள் கூறுகையில், "அலங்காரத்திற்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து பணமும் பக்தர்கள் அளித்த காணிக்கையாகும். நாளை இந்த பணம் அனைத்தும் அந்தந்த பக்தர்களுக்கு பூஜை செய்து பிரசாதங்களுடன் திருப்பி அளிக்கப்படும்" என்றனர்.



இந்த சிறப்பு அலங்காரத்தைக் காண பெருமளவில் பக்தர்கள் கோவிலுக்கு வந்து சென்றனர். ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற இந்த சிறப்பு அலங்காரம் பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...