கோவை இடுக்கண் குடி மாரியம்மன் கோவிலில் ஆறரை லட்சம் ரூபாய் மற்றும் நவதானியங்களால் சிறப்பு அலங்காரம்

கோவை இடுக்கண் குடி மாரியம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஆறரை லட்சம் ரூபாய் மற்றும் நவதானியங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் காணிக்கையாக பெறப்பட்ட பணம் மறுநாள் திருப்பி அளிக்கப்படும்.



Coimbatore: கோவை தாமஸ் வீதியில் அமைந்துள்ள இடுக்கண் குடி மாரியம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கோவில் கருவறை முழுவதும் ஆறரை லட்சம் ரூபாய் பணத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அம்மன் வீற்றிருக்கும் வாகனமான அன்னபட்சி முழுவதும் நவதானியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு அலங்காரம் பக்தர்களை கவர்ந்துள்ளது.



ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தின் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவில் நிர்வாகிகள் கூறுகையில், "அலங்காரத்திற்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து பணமும் பக்தர்கள் அளித்த காணிக்கையாகும். நாளை இந்த பணம் அனைத்தும் அந்தந்த பக்தர்களுக்கு பூஜை செய்து பிரசாதங்களுடன் திருப்பி அளிக்கப்படும்" என்றனர்.



இந்த சிறப்பு அலங்காரத்தைக் காண பெருமளவில் பக்தர்கள் கோவிலுக்கு வந்து சென்றனர். ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற இந்த சிறப்பு அலங்காரம் பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...