18 ஆண்டுகளுக்குப் பிறகு அப்பநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா

கோவை துடியலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவிலில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர்.



Coimbatore: கோவை துடியலூரை அடுத்த அப்பநாயக்கன்பாளையம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் திருநெறிய தீந்தழிம் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழா 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றதால், சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

விழா கடந்த 9ம் தேதி காலை 6 மணிக்கு முகூர்த்தக்கால் அமைத்து தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு சடங்குகள் மற்றும் நிகழ்வுகள் நடைபெற்றன. 17ம் தேதி ஸ்ரீ சித்தம்மாள் திருக்கோவிலில் இருந்து தீர்த்த குடங்கள் எடுத்து வரப்பட்டன. அதே நாள் மாலை ஊர் முழுவதிலும் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் முளைபாலிகைகள் அழைத்து வந்தனர். மாலையில் ஓயிலாட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.



18ம் தேதி பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, திருமகள் வழிபாடு, புற்று மண்ணெடுத்தல், முளைப்பாலிகை வழிபாடு ஆகியவை அடங்கும். அன்று மாலை முதற்கால வேள்வி, இரவு விமான கலசம் நிறுவுதல், மருந்து சாற்றுதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

19ம் தேதி மங்கல இசையுடன் தொடங்கிய விழாவில் பரிவார தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டும், இரண்டாம் கால வேள்வி, திருக்குடங்கள் புறப்பாடு, திருக்கோவிலை வலம் வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கெளமார மரபு தண்டபாணி சுவாமிகள் வழி வழி சிரவை ஆதினம் குருமகா சன்னிதானம் திருப்பெருந்திரு இராமானந்த குமரகுருபர சுவாமிகள் தலைமையில் கோவில் கோபுரத்திற்கு திருக்குடங்களில் இருந்து புனித நீர் ஊற்றப்பட்டு திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. பின்னர் மூலமூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. மாரியம்மனுக்கு அலங்கார மற்றும் அபிஷேக பூஜைகளும் நடைபெற்றன.

இந்த விழாவில் அப்பநாயக்கன்பாளையம், துடியலூர், பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனின் அருளைப் பெற்றுச் சென்றனர். அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Newsletter

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...