உடுமலை அருகே சிறுத்தை நடமாட்டம்: விவசாயிகள் அச்சம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கணபதி பாளையத்தில் கண்காணிப்பு கேமரா பதிவில் சிறுத்தை போன்ற மர்ம விலங்கு நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கணபதி பாளையத்தில் சிறுத்தை போன்ற மர்ம விலங்கு நடமாட்டம் இருப்பது கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் தெரியவந்துள்ளது. இந்த செய்தி அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கணபதி பாளையம் கிராமத்தில் பல விவசாயிகள் தங்கள் குடும்பங்களுடன் தோட்டச்சாலைகளில் வசித்து வருகின்றனர்.



இப்பகுதியில் பிராய்லர் கோழிப் பண்ணைகளும் அமைந்துள்ளன. இந்த பண்ணைகளில் வடமாநில தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் பணிபுரிந்து வருகின்றனர்.

சமீபத்தில், ஒரு தனியார் விவசாய பண்ணையில் உள்ள ஆடு, மாடு மற்றும் கோழிகளை அடைக்கும் கொட்டகையில் இருந்து கோழிகள் மர்மமான முறையில் காணாமல் போயின. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தபோது, இரவு நேரத்தில் சிறுத்தை போன்ற ஒரு மர்ம விலங்கு கோழிகளை குறிவைத்து பாய்ந்து, அவற்றைக் கவ்விச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் இந்த வீடியோ பதிவுகளை வனத்துறையினரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.



இந்த விலங்கு உண்மையில் சிறுத்தையா அல்லது வேறு ஏதேனும் விலங்கா என்பதை வனத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.

மேலும், இரவு நேரங்களில் தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுதல் போன்ற விவசாய பணிகளை மேற்கொள்ளும்போது, இந்த மர்ம விலங்கால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில், அதனைக் கூண்டு வைத்துப் பிடித்து வனப்பகுதியில் விடுவிக்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...