கிணத்துக்கடவு: குடியிருப்பு இல்லாத பகுதியில் தண்ணீர் இணைப்பு - வார்டு கவுன்சிலர் எதிர்ப்பு

கிணத்துக்கடவு சொலவம்பாளையம் ஊராட்சியில், குடியிருப்பு இல்லாத பகுதியில் தண்ணீர் இணைப்பு வழங்க முயற்சி. வார்டு கவுன்சிலர் சதீஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதி சொலவம்பாளையம் ஊராட்சியில் முறைகேடான முறையில் தண்ணீர் இணைப்பு வழங்க முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சொலவம்பாளையம் ஊராட்சியின் முதல் வார்டுக்கு உட்பட்ட பகுதியில், எந்த முன்னறிவிப்பும் இன்றி ஊராட்சி சார்பில் தண்ணீர் பைப் போடுவதற்கு குழி தோண்டப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை குறித்து வார்டு கவுன்சிலர் சதீஷ்குமார் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அருகிலுள்ள அன்பு நகரில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வேண்டி பல முறை அப்பகுதி மக்கள் ஊராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அதேபோல், வார்டு கவுன்சிலர் சதீஷ்குமார் அவர்களும் ஊராட்சி தலைவரிடம் பல முறை இது குறித்து வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், அந்தப் பகுதி மக்களுக்கு தண்ணீர் வழங்காமல், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு ஆதரவாக குடியிருப்பு இல்லாத பகுதியில் தண்ணீர் இணைப்பு கொடுப்பதற்கு முயற்சிகள் நடப்பதாக கவுன்சிலர் சதீஷ்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் வார்டு கவுன்சிலர் சதீஷ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், குடியிருப்புகள் உள்ள பகுதிகளுக்கே முதலில் தண்ணீர் இணைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...