பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பள்ளி மாணவர்களுக்கு சிறுநீரக நோய் விழிப்புணர்வு

பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 64 பள்ளி மாணவர்களுக்கு டயாலிசிஸ் பிரிவில் சிறுநீரக நோய் குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் சிறுநீரக நோய் காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விளக்கினர்.


கோவை: பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள டயாலிசிஸ் பிரிவில் சிறுநீரக நோய் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் பொள்ளாச்சி சாந்தி மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சேர்ந்த 64 மாணவர்கள் பங்கேற்றனர்.

பொது மருத்துவ துறை மற்றும் டயாலிசிஸ் பிரிவு தலைவர் மருத்துவர் வனஜா, மாணவர்களுக்கு சிறுநீரகம் செயலிழப்பது குறித்தும், அதற்கான சிகிச்சை முறைகள் பற்றியும் விரிவாக விளக்கினார். சிறுநீரக மாற்று சிகிச்சை மற்றும் டயாலிசிஸ் சிகிச்சை பற்றியும் அவர் தெளிவாக எடுத்துரைத்தார்.



சிறுநீரகம் செயலிழப்பதற்கான முக்கிய காரணங்களாக சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தாமல் இருப்பது, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை முறையாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்றவற்றை மருத்துவர் வனஜா சுட்டிக்காட்டினார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் செவிலியர் கண்காணிப்பாளர் கௌரி மற்றும் டயாலிசிஸ் டெக்னீசியன் அனுசுயா ஆகியோரும் உடனிருந்தனர்.

பயிற்சியின் முடிவில், பள்ளி மாணவர்கள் இந்த அனுபவம் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகக் கூறி, மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Newsletter

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...