தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வனக் கல்லூரியில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கம்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வனக் கல்லூரியில் வனவியல் மற்றும் பட்டுப்புழு வளர்ப்புப் பட்டதாரிகளுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கம் ஆகஸ்ட் 24, 2024 அன்று நடைபெற்றது. மாணவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.


கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஆகஸ்ட் 24, 2024 அன்று வனவியல் மற்றும் பட்டுப்புழு வளர்ப்புப் பட்டதாரிகளுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்தியது. பட்டதாரிகள் தொழில்முறைப் பாதையில் செல்ல மதிப்புமிக்க நுண்ணறிவு மற்றும் உத்திகளை வழங்குவதை கருத்தில் கொண்டு இந்த பட்டறை நடத்தப்பட்டது.



நிகழ்வின் முதன்மை விருந்தினர் மற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவர் முனைவர் எஸ். வெங்கடேசன், ஐ.எஃப்.எஸ்., கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (காம்பா), பெங்களூரு, உரையாற்றுகையில், "வனவியல் மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகள் மிகவும் பரவலாக உள்ளன. மேலும் இந்த வாய்ப்பைப் பெறுவதற்கான போட்டித் திறனை வளர்க்க இதுபோன்ற தொழில் வழிகாட்டுதல் கருத்தரங்கம் மூலம் பெறலாம்" என்று கூறினார்.



வனக்கல்லூரியின் முதன்மையர் முனைவர் அ.பாலசுப்ரமணியன் மாணவர்களை "வேலை தேடுபவர்களாக இருக்காதீர்கள், வேலை வழங்குபவர்களாக இருங்கள்" என்று வலியுறுத்தினார். மேலும், மாணவர்கள் தங்கள் சொந்த நிறுவனத்தை நிறுவி அதில் பல்வேறு பட்டதாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.



இந்நிகழ்வில் பங்கேற்ற புகழ்பெற்ற நிபுணர்கள், தொழில் ஆலோசகர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள், வனவியல் மற்றும் பட்டுப்புழு வளர்ப்புத் துறைகளில் உள்ள பல்வேறு தொழில் வாய்ப்புகள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் தேவையான அத்தியாவசிய திறன்கள் குறித்து ஆழமான வழிகாட்டுதலை வழங்கினர். பயிலரங்கில் ஊடாடும் அமர்வுகள், குழு விவாதங்கள் மூலம் துறைகளில் தற்போதைய சவால்கள் மற்றும் எதிர்கால வாய்ப்புகளை எதிர்கொள்ள தேவையான செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

வனவியல் பேராசிரியர் முனைவர் ஐ.சேகர் வரவேற்புரை ஆற்றினார். வனவியல் பேராசிரியர் முனைவர் எஸ்.உமேஷ் கண்ணா நிகழ்வை ஒருங்கிணைத்தார். வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அதன் பட்டதாரிகளின் தொழில்முறை வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கும், அவர்கள் அந்தந்தத் துறைகளில் சிறந்து விளங்குவதற்கும் உறுதியுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...