கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் புதிய பள்ளி மேலாண்மை குழு தேர்வு

கோவை பீளமேடு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பள்ளியின் முன்னேற்றத்திற்கான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Coimbatore: கோவை மாநகராட்சி பீளமேடு வார்டு எண் 26க்குட்பட்ட பயணியர் மில் ரோட்டில் உள்ள கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு 2024 ஆம் ஆண்டு கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர் தேர்வு நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ் சேவியர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 26 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி மற்றும் 27 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு தலைவராக திருமதி பிரியா அவர்களும், 24 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.



"நம் பள்ளி நம் பெருமை" என்ற கோஷத்தின் அடிப்படையில், மாதந்தோறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை சிறப்பாக நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. தனியார் பள்ளிகளை விட சிறந்த முறையில் மாணவர்களை வளர்ப்பது, 100% தேர்ச்சி பெற வைப்பது, விளையாட்டுத் துறையில் மாணவர்களை ஊக்குவிப்பது போன்ற பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



மேலும், மாதாந்திர கூட்டங்களில் அனைத்து பெற்றோர்களையும் கலந்து கொள்ள வைப்பது, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிப்பது, மாணவர்களின் பொது அறிவுத் திறன்களை மேம்படுத்துவது போன்ற முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன.



இக்கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான இந்த முயற்சி பெரும் வரவேற்பைப் பெற்றது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...