உடுமலையில் கிருஷ்ண ஜெயந்தி விழா: 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 6-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு நடனமாடி, பாடல்கள் பாடி மகிழ்ந்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 6-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.



தளி ரோட்டில் உள்ள தேஜஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில், 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு கலந்து கொண்டனர்.



குழந்தைகள் கிருஷ்ணர் பாடல்களுக்கு நடனமாடியதோடு, பக்தி பாடல்களையும் பாடி அனைவரையும் கவர்ந்தனர்.



விழாவின் முக்கிய நிகழ்வாக உரியடித்தல் போட்டி நடைபெற்றது. இதில் கிருஷ்ணர், ராதை வேடமிட்ட குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்று உரியடித்தனர்.

இந்த விழாவில் திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக பொது செயலாளர் வடுகநாதன், இளைஞர் அணி பாலகுரு, இந்து சாம்ராஜ்யம் நிறுவனத் தலைவர் சக்திவேல், விஸ்வ ஹிந்து பரிஷத் உடுமலை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குழந்தைகளின் கலகலப்பான பங்கேற்பால் விழா கோலாகலமாக நடைபெற்றது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...