கோவையில் பாஜக இளைஞர் அணி செயலாளர் மீது கொலை முயற்சி தாக்குதல்

கோவை ஆர்.எஸ்.புரத்தில் பாஜக இளைஞர் அணி செயலாளர் சதீஷ்குமார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கொலை முயற்சி தாக்குதல் நடத்தினர். காயமடைந்த சதீஷ்குமார் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Coimbatore: கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மண்டல இளைஞர் அணி செயலாளர் சதீஷ்குமார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கொலை முயற்சி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் கடுமையாக காயமடைந்த சதீஷ்குமார் உடனடியாக தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (கங்கா) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடன் ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதல் நடத்திய நபர்களை கண்டறியும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கொடூரமான தாக்குதலை கண்டித்து கோவை மாவட்ட தெற்கு பாஜக தலைவர் வசந்த ராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவத்தை எதிர்த்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் பாஜக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...