உடுமலை அருகே மக்களுடன் முதல்வர் திட்டம் - எம்பி கே.ஈஸ்வரசாமி பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தேவனூர்புதூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்றது. பொள்ளாச்சி எம்பி கே.ஈஸ்வரசாமி மற்றும் பல அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். பொதுமக்கள் பல்வேறு துறைகளில் மனுக்களை அளித்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தேவனூர்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட குலவிளக்கம்மன் திருமண மண்டபத்தில் இன்று மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்றது.



இந்த நிகழ்வில் பொள்ளாச்சி தொகுதி எம்பி கே.ஈஸ்வரசாமி, திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல. பத்மநாபன், உடுமலை ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன், ஒன்றிய செயலாளர் செழியன், மற்றும் உடுமலை வட்டாட்சியர் ஜஷ்வந்த்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு திட்டத்தை தொடக்கி வைத்தனர்.



இந்த திட்டத்தின் கீழ், தேவனூர்புதூர், செல்லப்பம்பாளையம், ராவணாபுரம், புங்கமுத்தூர் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு வருவாய் துறை சார்பில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. பொதுமக்கள் இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்தனர்.



அதிகாரிகள் மனுக்களின் தன்மையை ஆய்வு செய்த பின்னர், பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில் மனுக்களை அளிக்க பொதுமக்களுக்கு வழிகாட்டினர்.

இந்த நிகழ்வில் தாசில்தார்களான சுந்தரம், விவேகானந்தன், கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பியூலா எப்சி பாய், சுப்பிரமணியம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், ஊராட்சி மன்ற துணைத்தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...