கோவை கணுவாய் தடுப்பணை புனரமைப்பு: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

கோவை கணுவாய் தடுப்பணையை புனரமைக்க பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தொடங்கி வைத்தார். இப்பணி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும்.



கோவை: கோவை பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட கணுவாய் பகுதியில் அமைந்துள்ள கணுவாய் தடுப்பணையை புனரமைப்பதற்கான துவக்க விழா நடைபெற்றது. கெளசிகா நீர்கரங்கள் சார்பில் நடைபெற்ற இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமை வகித்தார்.



இவ்விழாவில் மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன், கோவை நீர்வளத்துறை பாசன உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் அம்சராஜ் மற்றும் பன்னிமடை ஊராட்சி தலைவர் பி.எஸ்.எம். ரத்தினம் மருதாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட ஆட்சியர் பூமி பூஜை செய்து விழாவை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். கணுவாய் தடுப்பணையை புனரமைக்க கெளசிகா நீர்கரங்கள் சார்பாக ஒரு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவில் பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர்.

இந்த குழுவினர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 7 மணி முதல் 9 மணி வரை இரண்டு மணி நேரம் கணுவாய் தடுப்பணையை தூர்வாரும் பணியில் ஈடுபடுவர். இதன் மூலம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து வரும் மழைநீர் கணுவாய் தடுப்பணை வழியாக சின்ன வேடம்பட்டி ஏரிக்கு மண்ணரிப்பின்றி செல்ல முடியும்.

இந்த முயற்சியால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, விவசாயம் செழிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...