கோவை ரேஸ்கோர்ஸில் ஜல்லிக்கட்டு காளை சிலை: விரைவில் திறப்பு

கோவை ரேஸ்கோர்ஸில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஜல்லிக்கட்டு காளை சிலை அமைக்கப்பட்டுள்ளது. 1 டன் எடையுள்ள இந்த சிலை விரைவில் திறக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.


Coimbatore: கோவை மாநகராட்சி பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸில் ஜல்லிக்கட்டு காளை சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை விரைவில் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் குளக்கரைகள் புனரமைப்பு, பொழுதுபோக்கு அமசங்கள் ஏற்படுத்துதல், 24 மணி நேர குடிநீர்த் திட்டம், பன்னடுக்கு வாகன நிறுத்தம், மாதிரிச் சாலை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ரேஸ்கோர்ஸ் ரவுண்டானா பகுதியில் தனியார் பங்களிப்புடன் ஜல்லிக்கட்டு காளை சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "ரேஸ்கோர்ஸ் பகுதியில் குதிரைப் பந்தயத்தை நினைவுகூறும் வகையில், ஏற்கெனவே குதிரைச் சிலை வைக்கப்பட்டுள்ளது. தற்போது, அந்தக் குதிரை சிலை அமைந்துள்ள இடத்தின் மறுபகுதியில் மக்களைக் கவரும் வகையில் ஜல்லிக்கட்டு காளையின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஃபைபர், அலுமினியம், வெண்கலம் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த சிலையின் எடை 1 டன். இச்சிலை விரைவில் திறக்கப்பட உள்ளது," என்று தெரிவித்தார்.

இந்த ஜல்லிக்கட்டு காளை சிலை அமைப்பதன் மூலம், கோவை நகரின் அழகு மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளதோடு, தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கும் சிறப்பு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சிலை கோவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...