திருப்பூரில் சர்வோதய சங்க ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருப்பூரில் தமிழ்நாடு சர்வோதய சங்க ஊழியர்கள் பொருட்கள் உற்பத்தி முடக்கம் மற்றும் விற்பனை வீழ்ச்சியை எதிர்த்து தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை இழப்பு அச்சுறுத்தலும் உள்ளது.



Coimbatore: திருப்பூரில் தமிழ்நாடு சர்வோதய சங்க ஊழியர்கள் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொருட்கள் உற்பத்தி முடக்கம் மற்றும் விற்பனை வீழ்ச்சியை எதிர்த்து இந்த போராட்டம் நடைபெறுகிறது.

தமிழ்நாடு சர்வோதய சங்கம் மூலமாக ஏராளமான கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு காதி கிராப்ட் மையங்கள் வழியாக விற்பனை செய்யப்பட்டு வந்தன. மூங்கில் பொருட்கள், ஊதுபத்தி, சோப், மெத்தைகள், கைவினை பொருட்கள் என பல்வேறு பொருட்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்த பொருட்களின் தரம் காரணமாக பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வந்தது.



ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பூர் தலைமை அலுவலகத்தில் பொருட்கள் முறையாக உற்பத்தி செய்யப்படவில்லை என்றும், வெளியில் இருந்து கொள்முதல் செய்யும் பொருட்களை கொள்முதல் செய்து தராமல் மெத்தனம் காட்டி வருவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இதன் காரணமாக விற்பனை பெருமளவு சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், உடனடியாக உற்பத்தியை அதிகரித்து சர்வோதய சங்கத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சர்வோதய சங்க விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...