உடுமலையில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' விநாயகர் சிலை: நடிகர் லாரன்ஸ் பாராட்டு

உடுமலையில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, மண்பாண்ட கலைஞர் ரஞ்சித் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' விநாயகர் சிலை உருவாக்கி, நடிகர் லாரன்ஸின் பாராட்டைப் பெற்றார். லாரன்ஸ் விரைவில் ரஞ்சித்தை நேரில் சந்திக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்ற மண்பாண்ட கலைஞர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தில் இடம்பெற்ற விநாயகர் சிலையை களிமண்ணால் உருவாக்கி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான ரஞ்சித், சில நாட்களுக்கு முன்னர் 'வேட்டையன்' படத்தில் இடம்பெற்ற விநாயகர் சிலையை உருவாக்கி கவனம் ஈர்த்தார். தற்போது, 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தில் இடம்பெற்ற விநாயகர் சிலையை மிகவும் அழகாக வடிவமைத்துள்ளார்.



இந்த சிலையின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த நிலையில், 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தின் நாயகன் நடிகர் லாரன்ஸ் தனது X தளத்தில் இதனைப் பகிர்ந்து ரஞ்சித்தின் கலைத் திறமையைப் பாராட்டியுள்ளார். மேலும், மிக விரைவில் ரஞ்சித்தை நேரில் சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.



லாரன்ஸின் இந்த பாராட்டும் அறிவிப்பும் ரஞ்சித்துக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இவரது கலைப்படைப்புகள் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...