கோவை கவுண்டம்பாளையம் புனித ஜான் போஸ்கோ ஆலயத்தில் அன்னை மரியாவின் பிறப்பு விழா கொண்டாட்டம்

கோவை கவுண்டம்பாளையம் புனித ஜான் போஸ்கோ ஆலயத்தில் அன்னை மரியாவின் பிறப்பு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் மாதா வேடங்களில் பவனி வந்தனர். "ஒளியின் விதை" கத்தோலிக்க மின்னிதழும் துவக்கப்பட்டது.


கோவை: கோவை மறைமாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புனித ஜான் போஸ்கோ ஆலயத்தில் அன்னை மரியாவின் பிறப்பு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ஆலயத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலவிதமான மாதா வேடங்களில் அலங்காரம் செய்துகொண்டு பவனியாக வந்தனர். இத்துடன் மாதாவின் வேண்டுதல் தேர் பவனியும் நடைபெற்றது.



மேலும் "ஒளியின் விதை" என்ற கத்தோலிக்க மின்னிதழும் இன்று சிறப்பாக துவங்கி வைக்கப்பட்டது.

இவ்விழாவில், டான் போஸ்கோ எக்சல்லேன்ஸ் பள்ளியின் நிர்வாக இயக்குனர் அருட்தந்தை பெர்னான்டு மோசஸ் அவர்களும் புனித ஜான் போஸ்கோ ஆலயப் பங்குத்தந்தை ததேயு சைமன் கென்னடி அவர்களும் சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றினர்.



இவ்விழாவில் புனித ஜான் போஸ்கோ ஆலயத்தின் பங்கு மக்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...