மேட்டுப்பாளையத்தில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு வடிவங்களில் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பவானி ஆற்றில் கரைக்கப்பட்டன.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் கோலாகலமான ஊர்வலம் நடைபெற்றது. இரண்டு நாட்கள் வழிபாட்டுக்குப் பிறகு, பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பவானி ஆற்றில் கரைக்கப்பட்டன.

மேட்டுப்பாளையம் சி.டி.சி டெப்போ பகுதியிலிருந்து துவங்கிய ஊர்வலம், சுப்பிரமணியர் கோவில் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் முடிவடைந்தது.





ஊர்வலத்தின் போது, சென்டை மேளம் முழங்கியது, மேலும் கேரள நடனக் கலைஞர்கள் முருகன், பட்டாம்பூச்சி போன்ற வேடங்களில் கண்கவர் நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.



ஊர்வலத்தில் பல்வேறு வடிவங்களில் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் இடம்பெற்றன.



மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள், ரூபாய் நோட்டுகள் மூலம் அலங்கரிக்கப்பட்ட விநாயகர், கருடன் தேரோட்டியாக வலம் வந்த விநாயகர் என பல வித்தியாசமான வடிவங்களில் விநாயகர் சிலைகள் காட்சியளித்தன. இந்து முன்னணி நிர்வாகிகள் ஊர்வலத்தை முன்னின்று நடத்தினர்.

கண்கவர் வான வேடிக்கைகளுடன் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று ஆர்வத்துடன் பார்வையிட்டனர். விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிகுந்த உற்சாகத்துடனும், பக்தி பரவசத்துடனும் நடைபெற்றது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...