மேட்டுப்பாளையம் அருகே கார் விபத்து: தீயில் சிக்கி ஓட்டுநர் பரிதாப உயிரிழப்பு

மேட்டுப்பாளையம் அருகே அன்னூர் சாலையில் அதிவேக கார் பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் தீப்பிடித்த காரில் சிக்கி ஓட்டுநர் உயிரிழந்தார். சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அன்னூர் சாலையில் நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் பயங்கர விபத்து ஒன்று நடந்தது. அதிவேகமாக வந்த கார் ஒன்று தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் உள்ள குளிர்பதன கிடங்கு அருகே உள்ள பாலத்தின் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது.

விபத்துக்குள்ளான கார் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. காரின் ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக் கொண்ட நிலையில், தீ பிடித்து எரிந்த காரிலிருந்து வெளியேற முடியாமல் தவித்தார். இதனால் உடல் கருகி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



தகவல் அறிந்ததும், மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காரில் பிடித்த தீ அருகிலுள்ள வீடுகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சி எடுத்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்தவர் சிறுமுகை அருகே உள்ள கோவிந்தனூரை சேர்ந்த நவீன்குமார் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...