முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் கோவையில் தொடக்கம்

கோவை நேரு விளையாட்டு அரங்கம் அருகிலுள்ள மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பதி போட்டிகளை தொடங்கி வைத்தார்.



கோவை: கோவை நேரு விளையாட்டு அரங்கம் அருகிலுள்ள மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறும் இப்போட்டிகள், கோவையில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டியாக துவங்கியது.



இப்போட்டிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேற்று தொடங்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



கோயம்புத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 39,738 பேர் இப்போட்டிகளுக்கு இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். இதில் அரசு ஊழியர்கள் 1,449, கல்லூரி மாணவர்கள் 16,809, பள்ளி மாணவர்கள் 18,679, பொதுப்பிரிவினர் 2,167, மாற்றுத்திறனாளிகள் (ஆண்கள்) 654 பேர் அடங்குவர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேரு விளையாட்டு அரங்கம், மாநகராட்சி மைதானம், ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி, குமரகுரு தொழில்நூட்ப கல்லூரி, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, கற்பகம் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், தியாகி இராமசாமி நினைவு பள்ளி, இராமகிருஷ்ணா வித்யாலாயா பள்ளி ஆகிய 9 இடங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.

மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் அணிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறும். தனி விளையாட்டுப் போட்டிகளில் முதல் இடம் பெறுபவர்களும் மாநில போட்டிக்கு செல்வர். மாநில அளவிலான போட்டியில் முதல் இடத்திற்கு ரூ.1,00,000, இரண்டாம் இடத்திற்கு ரூ.75,000, மூன்றாம் இடத்திற்கு ரூ.50,000 வழங்கப்படும். மொத்த பரிசுத் தொகை 37 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் வட்டிப் பணத்தை வசூலிக்க சென்ற பைனான்சியர் கொலை: ராஜஸ்தான் நபர் கைது

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பைனான்சியர் அபுதாகிர் பாஷா கொலை செய்யப்பட்ட வழக்கில், வட்டிக்குப் பெற்ற பணத்தை திரும்பக் கே...

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...