கோவை வழியாக ஹூப்ளி - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

கர்நாடகாவின் ஹூப்ளியில் இருந்து கேரளாவின் கொச்சுவேலி வரை கோவை வழியாக சிறப்பு ரயில் சேவை செப்டம்பர் 13 முதல் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


Coimbatore: கர்நாடக மாநிலம் ஹூப்ளி மற்றும் கேரள மாநிலம் கொச்சுவேலி இடையே கோவை வழியாக சிறப்பு ரயில் சேவை இயக்கப்படவுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயில் சேவை குறித்த விவரங்களை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஹூப்ளி - கொச்சுவேலி சிறப்பு ரயில் (எண்: 07333) செப்டம்பர் 13 ஆம் தேதி காலை 6:55 மணிக்கு ஹூப்ளியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6:45 மணிக்கு கொச்சுவேலி நிலையத்தை சென்றடையும்.

திரும்பும் பயணத்தில், கொச்சுவேலி - ஹூப்ளி சிறப்பு ரயில் (எண்: 07334) செப்டம்பர் 14 ஆம் தேதி நண்பகல் 12:50 மணிக்கு கொச்சுவேலியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12:50 மணிக்கு ஹூப்ளி நிலையத்தை வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில் பின்வரும் முக்கிய நிலையங்களில் நின்று செல்லும்: கொல்லம், காயன்குளம், செங்கன்னூர், திருவல்லா, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு மற்றும் பிரூர்.

இந்த சிறப்பு ரயில் சேவை மூலம் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் வகையில் பயணிகளுக்கு பெரும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...