அன்னபூர்ணா நிறுவனரை அவமதித்ததற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: எம்.பி. செ.ஜோதிமணி

கோவை அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் ஜி.எஸ்.டி குறித்து கூறிய கருத்துக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்வினையாற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கரூர் எம்.பி. செ.ஜோதிமணி இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.


Coimbatore: கோவை அன்னபூர்ணா உணவகத்தின் நிறுவனர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஜி.எஸ்.டி தொடர்பான கருத்தை முன்வைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

வெற்றிகரமாக தொழில் நடத்தி பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஒருவர், தனது அனுபவத்தின் மூலம் பகிர்ந்து கொள்ளும் கருத்தை செவிமடுத்து, அதை சரிசெய்ய வேண்டியது நிதியமைச்சரின் கடமை என கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால், அதை செய்யாமல் சீனிவாசனை மன்னிப்பு கேட்க வைத்து, அந்த வீடியோவை வெளியிடுவது ஆணவத்தின் உச்சம் என்றும், அறுவெறுப்பானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"அவர் என்ன பெரிய குற்றம் செய்துவிட்டார் மன்னிப்பு கேட்பதற்கு? உண்மையைப் பேசுவது ஒரு குற்றமா?" என்று செ.ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு நிகழ்ந்த இந்த அவமதிப்பிற்கு வருந்துவதாகவும், பாஜக, பாசிசம் என்ன செய்யும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "நீங்கள் பாஜகவிற்கு அள்ளிக்கொடுத்தாலும், அவர்களுக்கு அடிமையாகத்தான் இருக்கவேண்டும். அவர்கள் முன்னால் கை கட்டி வாய் பொத்தி நிற்கவேண்டும் என்று தான் எதிர்பார்ப்பார்கள். மற்றவர்களுக்கு சொந்தக் கருத்தே இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் உறுதியான நிலைப்பாடு" என்றும் செ.ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

அன்னபூர்ணா நிறுவனரை அவமதித்ததற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், சீனிவாசனுக்கு தனது அன்பையும் ஆதரவையும் தெரிவிப்பதாகவும் செ.ஜோதிமணி கூறியுள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...