கோவையில் தொழிலாளி 200 அடி ஆழ கிணற்றில் குதித்து தற்கொலை: மூன்றாவது நாளாக தேடும் பணி தொடர்கிறது

கோவை சங்கனூரில் விஜயராகவன் என்ற தொழிலாளி 200 அடி ஆழ கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். மூன்றாவது நாளாக தீயணைப்புத் துறையினர் உடலைத் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை சங்கனூர் பகுதியில் வசித்து வந்த விஜயராகவன் என்ற தொழிலாளி, 200 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். மூன்றாவது நாளாக தீயணைப்புத் துறையினர் அவரது உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



விஜயராகவன் என்ற விஜய், சங்கனூர் பகுதியில் உள்ள பர்னிச்சர் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். திருமணமாகாத அவர், பல வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வந்ததாகவும், குடும்பப் பிரச்சனையால் மனமுடைந்து காணப்பட்டதாகவும் தெரிகிறது.

நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, சற்று நேரத்தில் வருவதாகக் கூறிவிட்டுச் சென்ற விஜயராகவன், அருகிலுள்ள சண்முகம் என்பவருக்குச் சொந்தமான 200 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். உடனடியாக கவுண்டம்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் உயிரற்ற நிலையில் கிடந்த விஜயராகவனின் உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். உடல் கிடைக்காத நிலையில், தொடர்ந்து தேடும் பணிகள் நடந்து வருகின்றன. இன்று செப்டம்பர் 13 ஆம் தேதி, மூன்றாவது நாளாக தீயணைப்புத் துறையினர் அவரது உடலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...