ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள மக்கள் குடும்பத்துடன் சிறப்பு வழிபாடு செய்தனர். அத்திப்பூ கோலம், பாரம்பரிய உடைகள் மற்றும் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்வு ஆகியவை இடம்பெற்றன.



Coimbatore: கோவை சித்தாபுதூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான மலையாள மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

மலையாள மக்கள் தங்களின் பாரம்பரிய உடைகளில் கோவிலுக்கு வந்தனர். கோவில் வளாகத்தில் கொடிக்கம்பத்தின் கீழே அத்திப்பூ கோலம் போடப்பட்டிருந்தது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.



மலையாள மக்கள் தங்கள் வீடுகளிலும் அத்திப்பூ கோலமிட்டு சாமி தரிசனம் செய்து, பின்னர் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தனர். ஓணம் பண்டிகையின் போது மகாபலி மன்னன் பூவுலகிற்கு வருவதாக ஐதீகம் உள்ளது. அவரை வரவேற்கும் விதமாக 10 நாட்கள் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஐயப்பன் கோவிலில் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நாளில் பிறந்து சில மாதங்களான குழந்தைகளுக்கு முதல் முறையாக சோறு ஊட்டுவது ஐதீகம் என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்.

கேரளாவில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும், குறிப்பாக சென்னை, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளிலும் ஓணம் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...