தாராபுரத்தில் பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா: அமைச்சர்கள் மரியாதை

தாராபுரத்தில் திமுக நகரக் கழகம் ஏற்பாடு செய்த பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழாவில் அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மௌன ஊர்வலம் மற்றும் கொடியேற்றம் நடைபெற்றது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக நகரக் கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழா நிகழ்வுகள் திமுக நகரக் கழக செயலாளர் சு.முருகானந்தம் தலைமையில் நடைபெற்றன. முதலில், பூளவாடி பிரிவு பகுதியில் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து மௌன ஊர்வலம் துவங்கி, சின்னக்கடை வீதி, டி.எஸ். கார்னர், ஜவுளிக்கடை வீதி, பூக்கடை கார்னர் வழியாக அண்ணா சிலையை அடைந்தது.



அண்ணா சிலைக்கு வந்த பிறகு, அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அமைச்சர்கள் திமுக கொடியை ஏற்றி வைத்தனர். மேலும், அங்கிருந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவரும் திமுக ஒன்றியச் செயலாளருமான எஸ்.வி. செந்தில் குமார், தாராபுரம் நகர அவைத் தலைவர் கதிரவன், நகர மன்றத் தலைவர் பாப்பு கண்ணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தனசேகர், திமுக நகரத் துணைச் செயலாளர் கமலக்கண்ணன், மாவட்டத் துணைச் செயலாளர் பிரபாவதி பெரியசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி ராஜேந்திரன் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திமுக தாராபுரம் ஒன்றிய, நகர, பேரூர் இன்னாள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...