தாராபுரத்தில் பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா: அமைச்சர்கள் மரியாதை

தாராபுரத்தில் திமுக நகரக் கழகம் ஏற்பாடு செய்த பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழாவில் அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மௌன ஊர்வலம் மற்றும் கொடியேற்றம் நடைபெற்றது.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக நகரக் கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழா நிகழ்வுகள் திமுக நகரக் கழக செயலாளர் சு.முருகானந்தம் தலைமையில் நடைபெற்றன. முதலில், பூளவாடி பிரிவு பகுதியில் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து மௌன ஊர்வலம் துவங்கி, சின்னக்கடை வீதி, டி.எஸ். கார்னர், ஜவுளிக்கடை வீதி, பூக்கடை கார்னர் வழியாக அண்ணா சிலையை அடைந்தது.



அண்ணா சிலைக்கு வந்த பிறகு, அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அமைச்சர்கள் திமுக கொடியை ஏற்றி வைத்தனர். மேலும், அங்கிருந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவரும் திமுக ஒன்றியச் செயலாளருமான எஸ்.வி. செந்தில் குமார், தாராபுரம் நகர அவைத் தலைவர் கதிரவன், நகர மன்றத் தலைவர் பாப்பு கண்ணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தனசேகர், திமுக நகரத் துணைச் செயலாளர் கமலக்கண்ணன், மாவட்டத் துணைச் செயலாளர் பிரபாவதி பெரியசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி ராஜேந்திரன் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திமுக தாராபுரம் ஒன்றிய, நகர, பேரூர் இன்னாள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...