பெரிய நெகமத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் பொள்ளாச்சி எம்பி கே.ஈஸ்வரசாமி

கோவை மாவட்டம் பெரிய நெகமத்தில் ரூ.90 லட்சத்திற்கும் மேலான மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை பொள்ளாச்சி எம்பி கே.ஈஸ்வரசாமி தொடங்கி வைத்தார். சாலைப் பணிகள், சுகாதார நிலையம் மற்றும் சிறுவர் பூங்கா உள்ளிட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.


Coimbatore: கோவை மாவட்டம் பெரிய நெகமத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி செப்டம்பர் 16 அன்று தொடங்கி வைத்தார்.

ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் பெரிய நெகமம், பல்லடம் சாலை - சந்திராபுரம் சாலை இணைப்பு சாலைக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எம்பி கே.ஈஸ்வரசாமி கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.



இதேபோல, பெரிய நெகமம், காளியப்பன்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் இருந்து வாய்க்கால் மேடு வரை சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியும் நடைபெற்றது.



கோவை தெற்கு மாவட்டம், நெகமம் பேரூர் கழக பகுதியில் ரூ.72 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நெகமம் பல்லடம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சாய் கே.வி.கே ரெசிடென்சியில் சிறுவர் பூங்கா திறப்பு விழா நிகழ்ச்சியையும் எம்பி கே.ஈஸ்வரசாமி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...