கோவை 1வது வார்டில் 'உங்களை தேடி - உங்கள் ஊரில்' சிறப்பு திட்ட முகாம்

கோவை 1வது வார்டில் "உங்களை தேடி - உங்கள் ஊரில்" சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து மனுக்களை அளித்தனர். அதிகாரிகள் விரைவில் தீர்வு காண உறுதியளித்தனர்.



கோவை: கோவையில் முதலமைச்சரின் "உங்களை தேடி - உங்கள் ஊரில்" சிறப்பு திட்ட முகாம் 1வது வார்டில் நேற்று (செப்டம்பர் 18) நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட சமூக நல அலுவலர் சு.அம்பிகா மற்றும் 1வது வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்வில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பல்வேறு பிரச்சினைகள் குறித்து மனுக்களை அளித்தனர். மகளிர் உரிமைத்தொகை, பட்டா, சாலை போக்குவரத்து, குடிநீர் மற்றும் பொது பிரச்சினைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டன.



மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், அவற்றை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், அனைத்து பிரச்சனைகளும் உடனடியாக தீர்க்கப்படும் என்றும் உறுதியளித்தனர்.



இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த முகாம் பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காண்பதற்கான ஒரு முக்கிய முயற்சியாக அமைந்துள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...