கோவை 1வது வார்டில் 'உங்களை தேடி - உங்கள் ஊரில்' சிறப்பு திட்ட முகாம்

கோவை 1வது வார்டில் "உங்களை தேடி - உங்கள் ஊரில்" சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து மனுக்களை அளித்தனர். அதிகாரிகள் விரைவில் தீர்வு காண உறுதியளித்தனர்.



கோவை: கோவையில் முதலமைச்சரின் "உங்களை தேடி - உங்கள் ஊரில்" சிறப்பு திட்ட முகாம் 1வது வார்டில் நேற்று (செப்டம்பர் 18) நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட சமூக நல அலுவலர் சு.அம்பிகா மற்றும் 1வது வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்வில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பல்வேறு பிரச்சினைகள் குறித்து மனுக்களை அளித்தனர். மகளிர் உரிமைத்தொகை, பட்டா, சாலை போக்குவரத்து, குடிநீர் மற்றும் பொது பிரச்சினைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டன.



மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், அவற்றை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், அனைத்து பிரச்சனைகளும் உடனடியாக தீர்க்கப்படும் என்றும் உறுதியளித்தனர்.



இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த முகாம் பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காண்பதற்கான ஒரு முக்கிய முயற்சியாக அமைந்துள்ளது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...