பொள்ளாச்சி V. ஜெயராமன் வகுத்தம்பாளையம் கிராமத்தில் புதிய நியாய விலைக் கடையை திறந்து வைத்தார்

பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் V. ஜெயராமன் செப்டம்பர் 18 அன்று வகுத்தம்பாளையம் கிராமத்தில் புதிய நியாய விலைக் கடையை திறந்து வைத்தார். இந்த கடை பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டது.


கோவை: பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியின் கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றியம், தேவனாம்பாளையம் ஊராட்சியில் உள்ள வகுத்தம்பாளையம் கிராமத்தில் புதிய நியாய விலைக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையை பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து கட்டப்பட்டுள்ளது.



செப்டம்பர் 18 அன்று, முன்னாள் அமைச்சரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரும், கழகத் தேர்தல் பிரிவு செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளருமான முனைவர் பொள்ளாச்சி V. ஜெயராமன் இந்த புதிய நியாய விலைக் கடையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அவர் கடையின் விற்பனையையும் துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அதிமுக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் ஆணைக்கிணங்க, V. ஜெயராமன் கழகத்தின் புதிய உறுப்பினர் அட்டைகளை தேவனாம்பாளையம் மற்றும் வகுத்தம்பாளையம் கிளை கழக உறுப்பினர்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்வில் அவர் சிறப்புரையும் ஆற்றினார்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...