கோவையில் தலைமறைவாக இருந்த கொலை வழக்கு குற்றவாளி சுட்டுப் பிடிப்பு

கோவையில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி ஆல்வின், காவல்துறையினரை தாக்க முயன்றபோது, தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தி பிடிக்கப்பட்டார். காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.


கோவையில் கடந்த ஒரு வருடமாக தலைமறைவாக இருந்த கொலை வழக்கு குற்றவாளி ஆல்வின், காவல்துறையினரால் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாநகர காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினர், ரவுடி ஆல்வினை தேடி வந்தனர். கோவை கொடிசியா வளாகப் பகுதியில் ஆல்வின் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படையினர் அப்பகுதிக்கு சென்றனர்.

காவல்துறையினரை கண்டதும் ஆல்வின் கத்தியால் தாக்க முயன்றார். இதில் தலைமை காவலர் ராஜ்குமாரின் இடது மணிக்கட்டில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. மேலும் மற்ற காவலர்களையும் தாக்கி தப்ப முயன்ற ஆல்வினை, தற்காப்புக்காக உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் கை துப்பாக்கியால் சுட்டு பிடித்தார்.



துப்பாக்கிச் சூட்டில் ஆல்வினின் இரண்டு கால்களிலும் காயம் ஏற்பட்டது. காயமடைந்த ஆல்வினுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆல்வின் மீது 3 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி உள்ளிட்ட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களை தடுக்க கோவை காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பிரபல ரவுடி ஆல்வின் காவல்துறையினரை தாக்க முயன்றதும், அவரை சுட்டு பிடித்ததும் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...