காரமடை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 5 ½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் குண்டர் சட்டத்தில் கைது

கோவை காரமடை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 5 ½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் காரமடை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 5 ½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி காரமடை அருகே சின்ன தொட்டிபாளையம் - காந்தி நகர் செல்லும் சாலையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 ½ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த முருகலிங்கம் (39) மற்றும் கோவை பாலத்துறையைச் சேர்ந்த சுதாகர் (29) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

முருகலிங்கம் மற்றும் சுதாகர் ஆகியோர் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்ததால், கள்ளச் சந்தை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் குண்டர் சட்டத்தில் அடைக்க இன்ஸ்பெக்டர் ராஜகுமார், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி-க்கு பரிந்துரை செய்தார்.

இதனை ஏற்று, முருகலிங்கம் மற்றும் சுதாகர் ஆகிய இருவரின் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் நகல் சிறையில் உள்ள இருவரிடமும் வழங்கப்பட்டது.

ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியை கடத்தி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...