மேட்டுப்பாளையம் அருகே பெள்ளாதி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் சமூக தணிக்கை கூட்டம்

மேட்டுப்பாளையம் அருகே பெள்ளாதி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. 2023-2024 ஆண்டுகளில் நடைபெற்ற பணிகள், ஊதியம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.


கோவை: மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெள்ளாதி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

பெள்ளாதி ஊராட்சி மன்ற தலைவர் பூபதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 2023 மற்றும் 2024ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிந்த வேலை பணிகள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கிய ஊதியம் குறித்து சமூக தணிக்கை நடைபெற்றது. சமூக தணிக்கையாளர் மற்றும் வட்டார வள பயிற்றுநர் ரவிச்சந்திரன் பங்கேற்று பணிகள் குறித்து தணிக்கை செய்தார்.



இந்த தணிக்கையில், நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாளர்களின் வருகை பதிவேட்டிற்கும் வருகை நாட்களின் கணினி பதிவேடு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், விவசாய தோட்டத்தில் நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கரை அமைப்பது குறித்த பணிகளையும் பொதுமக்கள் முன்னிலையில் ஆய்வு செய்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...