கோயில் பிரசாதத்தில் மாட்டுக்கொழுப்பு கலப்பு குற்றச்சாட்டு: இந்து முன்னணி போராட்டம்

இந்து கோயில்களில் பிரசாதத்தில் மாட்டுக்கொழுப்பு கலந்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை கண்டித்து இந்து முன்னணி சார்பில் 28 ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற உள்ளது.



Coimbatore: இந்து கோயில்களில் பிரசாதத்தில் மாட்டுக்கொழுப்பு கலந்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை கண்டித்து இந்து முன்னணி சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டம் வரும் 28 ஆம் தேதி ஆஞ்சநேயர் கோவில்கள் முன்பு தேங்காய் உடைத்து வேண்டுகோள் வைக்கும் வடிவில் நடைபெறும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

தாராபுரம் ஆஞ்சநேயர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு பேசிய அவர், திருப்பதி கோவிலில் லட்டு பிரசாதத்தில் மாட்டுக்கொழுப்பு கலந்திருப்பதாக கூறப்படுவது வருத்தத்துக்குரியது என்றார். இது ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி இருந்த காலத்தில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.



தமிழக கோயில்களிலும் பக்தர்களுக்கு தரமற்ற பிரசாதம் வழங்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக சுப்பிரமணியம் கூறினார். பழனி உள்பட தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்களை தர சோதனை செய்ய வேண்டும் என்பது இந்து முன்னணியின் கோரிக்கையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் இந்து முன்னணியின் மாநில செயலாளர் செந்தில்குமார், கோட்டச் செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர்கள் பாலசுப்பிரமணி, சங்கிலித்துறை நகர நிர்வாகிகள் சண்முகம், கார்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...