கோயில் பிரசாதத்தில் மாட்டுக்கொழுப்பு கலப்பு குற்றச்சாட்டு: இந்து முன்னணி போராட்டம்

இந்து கோயில்களில் பிரசாதத்தில் மாட்டுக்கொழுப்பு கலந்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை கண்டித்து இந்து முன்னணி சார்பில் 28 ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற உள்ளது.



Coimbatore: இந்து கோயில்களில் பிரசாதத்தில் மாட்டுக்கொழுப்பு கலந்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை கண்டித்து இந்து முன்னணி சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டம் வரும் 28 ஆம் தேதி ஆஞ்சநேயர் கோவில்கள் முன்பு தேங்காய் உடைத்து வேண்டுகோள் வைக்கும் வடிவில் நடைபெறும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

தாராபுரம் ஆஞ்சநேயர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு பேசிய அவர், திருப்பதி கோவிலில் லட்டு பிரசாதத்தில் மாட்டுக்கொழுப்பு கலந்திருப்பதாக கூறப்படுவது வருத்தத்துக்குரியது என்றார். இது ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி இருந்த காலத்தில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.



தமிழக கோயில்களிலும் பக்தர்களுக்கு தரமற்ற பிரசாதம் வழங்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக சுப்பிரமணியம் கூறினார். பழனி உள்பட தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்களை தர சோதனை செய்ய வேண்டும் என்பது இந்து முன்னணியின் கோரிக்கையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் இந்து முன்னணியின் மாநில செயலாளர் செந்தில்குமார், கோட்டச் செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர்கள் பாலசுப்பிரமணி, சங்கிலித்துறை நகர நிர்வாகிகள் சண்முகம், கார்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...