கோவை பீளமேடு பகுதியில் ரூ.22.50 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் பணி தொடக்கம்

கோவை மாநகராட்சி வார்டு 26ல் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஜி.ஆர்.ஜி. கல்வி நிறுவனத்தின் CSR நிதியுடன் 210 மீட்டர் நீளத்திற்கு ரூ.22.50 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 26க்குட்பட்ட பீளமேடு, பாலகுரு கார்டன் பகுதியில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணி நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.

ஜி.ஆர்.ஜி. கல்வி நிறுவனத்தின் முழு (100%) சமூக பொறுப்பு நிதியின் (CSR Fund) கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 210 மீட்டர் நீளத்திற்கு ரூ.22.50 லட்சம் மதிப்பீட்டில் இந்த மழைநீர் வடிகால் அமைக்கப்படும்.

கோவை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் இன்று (செப்டம்பர் 24) இந்த பணியை தொடங்கி வைத்து, ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், உதவி ஆணையர் ஸ்ரீதேவி, மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, உதவி செயற்பொறியாளர் எழில், மண்டல சுகாதார அலுவலர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் திருமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் விஜயகுமார், ஜி.ஆர்.ஜி. கல்வி நிறுவன அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மழைநீர் வடிகால் அமைப்பதன் மூலம், பீளமேடு மற்றும் பாலகுரு கார்டன் பகுதியில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...