தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் சனநாயக பேரவையினர் முற்றுகைப் போராட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், பட்டியலின அருந்ததியர் மக்களுக்கு வழங்கப்பட்ட உபரி நிலங்களுக்கு எஃப் பட்டா கோரி ஆதித்தமிழர் சனநாயக பேரவையினர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை ஆதித்தமிழர் சனநாயக பேரவை சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்திற்கு ஆதித்தமிழர் சனநாயக பேரவையின் நிறுவனத் தலைவர் பவுத்தன் தலைமை வகித்தார்.

போராட்டக்காரர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை சமர்ப்பித்தனர். அந்த மனுவில், காங்கேயம் வட்டத்திற்குட்பட்ட குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தின் காடையூர் மற்றும் வட சிண்ணாரி பாளையம் ஆகிய இரண்டு கிராமங்களில் உள்ள வீனம்பாளையம், கல்லாங்காட்டுப்புதூர், பெனங்காளி வலசு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பட்டியலின அருந்ததிய மக்களுக்கு 1994 ஆம் ஆண்டு உபரி நிலம் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



ஈரோடு நில சீர்திருத்த உதவி ஆணையரின் உத்தரவின்படி, காடையூர் கிராமத்தில் 30 பயனாளிகளுக்கும், வட சின்னாரி பாளையம் கிராமத்தில் 21 பயனாளிகளுக்கும் மொத்தம் 51 பயனாளிகளுக்கு உபரி நிலம் வழங்கப்பட்டது. ஆனால், 30 ஆண்டுகள் கடந்தும் இந்த நிலங்களை விவசாயம் செய்வதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இந்த நிலங்களை அளவீடு செய்து, விவசாயம் செய்வதற்கான எஃப் பட்டா நகல் உடனடியாக வழங்க வேண்டும் என்று ஆதித்தமிழர் சனநாயக பேரவையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தொடர் போராட்டங்களை நடத்தப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இப்போராட்டத்தில் ஆதித்தமிழர் சனநாயக பேரவையின் மாவட்ட நிர்வாகி சி.கார்த்திக், அம்பேத்கர் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் வி.கே.தேவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...