உடுமலையில் ஓய்வு பெற்ற துணைப்பதிவாளர் மனைவி நினைவாக 450 பேருக்கு 9 லட்சம் மதிப்பிலான உதவிகள்

உடுமலையில் ஓய்வு பெற்ற கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் கிருஷ்ணன், மறைந்த தனது மனைவி மீனம்மாளின் 10 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 450 ஏழை எளிய மக்களுக்கு 9 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கினார்.



திருப்பூர்: உடுமலையில் ஓய்வு பெற்ற கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் கிருஷ்ணன், மறைந்த தனது மனைவி மீனம்மாள் அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு 9 லட்சம் மதிப்பிலான உதவிகளை வழங்கினார்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுமார் 450க்கு மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், சேலை, போர்வை உள்ளிட்ட 22 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் நிசார் அகமது, அனைத்து துறை ஓய்வு ஊழியர்கள் சங்கம் உடுமலை வட்ட கிளை தலைவர் தாசன், உடுமலை நகர கூட்டுறவு பண்டகசாலை செயலாளர் துரைராஜ், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்ட நிர்வாகி சுதா சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், நகர கூட்டுறவு பண்டக சாலை எழுத்தர் லதா, கணக்கம்பாளையம் குடியிருப்போர் சங்கத் தலைவர் ராஜேந்திரன், ஓய்வு பெற்ற வட்டாச்சியர் நடராஜ் மற்றும் ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இது போன்ற தொடர் உதவிகளை கடந்த 10 ஆண்டுகளாக வழங்கி வரும் கிருஷ்ணனின் செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது. தனது மனைவியின் நினைவாக ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் இவரது செயல் சமூகத்தில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...