மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு: அ.தி.மு.க கவுன்சிலர்கள் மீது வழக்கு

மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் டம்ளர் வீசி, ஆவணங்களை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் 9 அ.தி.மு.க கவுன்சிலர்களுக்கு தடை விதிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: மேட்டுப்பாளையம் நகராட்சியின் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி தலைமையில் நேற்று (செப்டம்பர் 27) நடைபெற்றது. கூட்டத்தில் 32 தீர்மானங்கள் மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டன.

கூட்டத்தில் மக்கள் பிரச்சினை குறித்து பேசும்போது அ.தி.மு.க மற்றும் தி.மு.க கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்போது, 7-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் முகமது இப்ராஹீம் (சலீம்) தண்ணீர் குடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சில்வர் டம்ளரை தூக்கி தரையில் வீசினார். அது தெறித்து நகர் மன்ற தலைவர் மற்றும் கமிஷனர் அருகில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தொடர்ந்து இரு கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 18-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் சுனில்குமார் ஆவேசமாக மன்றத்தின் முன் வைக்கப்பட்ட தீர்மான நகலை கிழித்து வீசினார். இதனையடுத்து போலீசார் கூட்ட அரங்கில் நுழைந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், நகராட்சி தலைவர் மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி, அ.தி.மு.க கவுன்சிலர்களின் வன்முறை போக்கை கண்டித்து, வரும் இரு கூட்டத் தொடர்களில் 9 அ.தி.மு.க கவுன்சிலர்கள் பங்கேற்க தடை விதித்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து அ.தி.மு.க கவுன்சிலர்கள் நகர்மன்ற கூட்ட அரங்கிலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, நகராட்சி அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். நகராட்சி தலைவர், கமிஷனர், காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் அ.தி.மு.க கவுன்சிலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இரவில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர்.

நகராட்சி கமிஷனர் அமுதா அளித்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் 9 அ.தி.மு.க கவுன்சிலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டுதல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...