கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் மது போதையில் நண்பர்களால் இளைஞர் கல்லால் தாக்கி கொலை

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் மது போதையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், கண்ணன் என்ற இளைஞர் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Coimbatore: கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் வளமீட்பு பூங்காவை ஒட்டிய பகுதியில் ஒரு இளைஞர் தலையில் படுகாயங்களுடன் பிணமாக கிடப்பதாக பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் கோவை, சித்தாபுதூர் வெங்கடசாமி ரோட்டைச் சேர்ந்த லோகநாதனின் மகன் கண்ணன் என்பது தெரியவந்தது. கண்ணன் தனது நண்பர்களான கார்த்திக், ரவீந்திரன், சதீஷ் உட்பட ஐந்து பேருடன் சித்தாப்புதூரில் உள்ள ஒரு பாரில் மது அருந்தியுள்ளார்.



பின்னர் வாடகை காரில் பெரியநாயக்கன்பாளையம் வளமீட்பு பூங்கா பகுதிக்கு வந்த அவர்கள், அங்கும் மது அருந்தினர். போதை தலைக்கேறியதும் கண்ணனுக்கும் நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நண்பர்கள் கண்ணனை கருங்கல் மற்றும் பீர் பாட்டிலால் தலையிலும் வயிற்றிலும் பலமாக தாக்கினர். இதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

சம்பவத்திற்குப் பிறகு கண்ணனின் நண்பர்கள் தப்பியோடி விட்டனர். இந்த கொலை தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கார்த்திக், ரவீந்திரன், சதீஷ் உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...