கோவை ஈஷா மையத்தில் விசாரணை நிறைவு; நாளை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இரண்டு நாட்கள் நடந்த விரிவான விசாரணை நிறைவடைந்தது. அறிக்கை நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என கோவை எஸ்.பி கார்த்திகேயன் அறிவித்தார்.


Coimbatore: கோவை ஈஷா யோகா மையத்தில் இரண்டு நாட்கள் நடந்த விரிவான விசாரணை நிறைவடைந்ததாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்தார். விசாரணை குறித்த அறிக்கை நாளை (அக்டோபர் 4) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, கோவை மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் அம்பிகா மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 6 குழுக்கள் கடந்த இரண்டு நாட்களாக ஈஷா மையத்தில் விசாரணை மேற்கொண்டன.

விசாரணையின் போது, ஈஷா மையத்தில் உள்ள அறைகளில் சோதனை நடத்தப்பட்டது. வெளிநாட்டிலிருந்து வந்து தங்கியிருப்பவர்களின் விசா உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. ஈஷா பள்ளி வளாகத்தில் தங்கிப் படிக்கும் குழந்தைகளிடமும், துறவறம் பெற்றுள்ள பெண்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இரண்டாவது நாள் விசாரணையில் சுகாதாரத் துறையினர், மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், மனநல ஆலோசகர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ஈஷா மையத்தின் மீதுள்ள அனைத்து கிரிமினல் வழக்குகளும் ஆய்வு செய்யப்பட்டதாக எஸ்.பி. கார்த்திகேயன் தெரிவித்தார்.

ஈஷா யோகா மையம் தொடர்பான அனைத்து விவரங்களும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றும், ஈஷா மையம் கொடுத்திருக்கும் புகார்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படும் என்றும் எஸ்.பி. கார்த்திகேயன் கூறினார். விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, அரசுத் துறை வாகனங்கள் ஈஷா மைய வளாகத்திலிருந்து வெளியேறின.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...