அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி ஏற்பை முன்னிட்டு கோவையில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்

கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மீண்டும் பதவி ஏற்பை முன்னிட்டு ஸ்ரீ ராஜ விநாயகர் திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, 1000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


கோவை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டதை முன்னிட்டு கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. கோவை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் அசோக் பாபு ஆறுகுட்டி தலைமையில் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டதுடன், 1000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பணியாற்றி, கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் 99% வரலாற்று வெற்றியை பெற்று தந்தவர் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. கடந்த 15 மாதங்களுக்கு முன்பு அமலாக்க துறையால் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு ஜாமினில் விடுதலை பெற்று மீண்டும் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

இதனைக் கொண்டாடும் பொருட்டு கோவையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் பிரியாணி வழங்கி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவியின் ஆலோசனைப்படி, துணை செயலாளர் அசோக் பாபு ஆறுகுட்டி தலைமையில் கோவை மாநகராட்சி 4-வது வார்டுக்கு உட்பட்ட ஸ்ரீகாந்த் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜ விநாயகர் திருக்கோவிலில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் ஏற்பாட்டில் சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை செய்து 1000த்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், 4-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கதிர்வேல்சாமி, 5-வது வார்டு துணை செயலாளர் சுந்தரராஜ், கார்த்திக், நகர் மற்றும் பகுதி கழக உடன் பொறுப்பாளர்கள், கழக உடன்பிறப்புகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...