மாதப்பூர் விவசாயிகளுக்கு வழித்தடம் கோரி ஆட்சியரிடம் திமுக செயலாளர் மனு

கோவை தெற்கு மாவட்டம் மாதப்பூர் ஊராட்சியில் இரயில்வே பணிகளால் வழித்தடம் இழந்த 18 குடும்பங்களுக்கு உதவக் கோரி, திமுக செயலாளர் தளபதி முருகேசன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.


Coimbatore: கோவை தெற்கு மாவட்டம், சூலூர் ஒன்றியம், மாதப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இரயில்வே எல்லைப் பணிகள் காரணமாக 18 குடும்பங்கள் தங்கள் வழித்தடத்தை இழந்துள்ளனர். இந்த நிலையில், அவர்களுக்கு மீண்டும் வழித்தடம் பெற்றுத்தர வேண்டும் என்று கோரி, கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தார்.

மாதப்பூர், தொட்டிய பாளையம், இராமாச்சியம்பாளையம் ஆகிய பகுதிகளில் இரயில்வே பாதை எல்லை பணிகளுக்காக இரயில்வே நிர்வாகம் தனியார் மற்றும் விவசாய நிலங்களை கையகப்படுத்தி தடுப்பு வேலிகள் அமைக்க குழிகள் தோண்டியுள்ளது. இதன் காரணமாக 18 குடும்பங்கள் தங்கள் வழித்தடத்தை இழந்துள்ளனர்.

இந்த நிலையை கண்டித்தும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எந்தவித இடர்பாடுகளும் இல்லாமல் அவர்களுடைய பாதைகளை மீண்டும் பெற்றுத்தர வேண்டும் என்றும் கோரி, சிங்காநல்லூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தளபதி முருகேசன் இன்று (அக்டோபர் 4) மனு அளித்தார். மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர்களிடம் நேரில் சந்தித்து இந்த பிரச்சினையை எடுத்துரைத்த அவர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...