கோவை வடக்கு தொகுதியில் மக்களுக்கு நன்றி தெரிவித்த கோவை எம்பி கணபதி ராஜ்குமார்

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் கோவை எம்பி கணபதி ராஜ்குமார் மக்களுக்கு நன்றி தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற உதவிய கழக நிர்வாகிகள், கட்சி தோழர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி கூறினார்.



Coimbatore: கோவை மாவட்டம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைத் தேடித் தந்த கழக நிர்வாகிகளுக்கும் அனைத்துக் கட்சி தோழமைகளுக்கும் மற்றும் வாக்காளர் பெருமக்களுக்கும் கோவை எம்பி கணபதி ராஜ்குமார் இன்று (அக்டோபர் 4) நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் வடக்கு மாவட்ட செயலாளர் தொ. ரவி, மாவட்டத் துணைச் செயலாளர் அசோக், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மனோஜ், கவுண்டம்பாளையம் பகுதி செயலாளர் சரத் விக்னேஷ், துடியலூர் பகுதி செயலாளர் அருள் குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி. சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.



கோவை எம்பி கணபதி ராஜ்குமார் தனது நன்றியுரையில், "வடக்கு சட்டமன்ற தொகுதியின் மக்கள் எனக்கு அளித்த ஆதரவுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த வெற்றி என்னுடைய தனிப்பட்ட வெற்றி அல்ல, நம் அனைவரின் கூட்டு முயற்சியின் வெற்றியாகும். இந்த நம்பிக்கைக்கு ஏற்ப நான் தொடர்ந்து உழைப்பேன்" என்று தெரிவித்தார்.



மேலும், வரும் காலங்களில் வடக்கு தொகுதியின் வளர்ச்சிக்காக தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும், மக்களின் குறைகளை களைய தொடர்ந்து பாடுபடுவதாகவும் உறுதியளித்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எம்பியின் உரையை வரவேற்று ஆதரவு தெரிவித்தனர்.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...