கோவை சங்கனூர் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா தொடக்கம்

கோவை சங்கனூர் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.


கோவை: கோவை சங்கனூர் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சங்கனூரில் இருந்து நல்லாம்பாளையம் செல்லும் வழியில் அன்னியப்பன் வீதியில் அமைந்துள்ள ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இக்கோவிலில் தசரா திருவிழா நேற்று காலை 11.30 மணிக்கு முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. முன்னதாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா தொடங்கிய பிறகே இக்கோவிலில் விழா தொடங்கியது.



திருவிழாவையொட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். அவர்கள் கொண்டு வந்த மாலைகளை அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்து, பூசாரி மூலம் கழுத்தில் அணிந்து கொண்டனர். ஞானமூர்த்தீஸ்வரர்-சமேத முத்தாரம்மன் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் பல்வேறு பூஜைகள், சிறப்பு அலங்காரங்கள் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. விழா தொடங்கியதையொட்டி தசராக்குழுவினர் இந்து, முஸ்லிம், மாரியம்மன், போலீஸ் என பல்வேறு வேடங்கள் அணிந்து கோவை மாநகர பகுதியில் உலா வர ஆரம்பித்துள்ளனர்.

தொடர்ந்து குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்யும் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...