பொள்ளாச்சி அருகே சிறுத்தை தாக்குதல்: கன்று குட்டி காயம்

பொள்ளாச்சி அருகே புளியங்காண்டியில் தனியார் தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை கன்று குட்டியை தாக்கியது. வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அச்சம்.



கோவை: பொள்ளாச்சியை அடுத்த புளியங்காண்டி பகுதியில் தனியார் தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை ஒன்று கன்று குட்டியை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியின் அடிவாரத்தில் விவசாய தோட்டங்களும், குடியிருப்பு நிலங்களும் உள்ளன. இப்பகுதியில் அவ்வப்போது காட்டில் இருந்து வரும் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.

நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் புளியங்காண்டி அருகே சுபாஷினி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. இதனையடுத்து தோட்டத்தில் உள்ளவர்கள் அங்கு சென்று பார்த்தபோது, சிறுத்தை ஒன்று கன்று குட்டியை வேட்டையாட முயற்சித்துள்ளது. தோட்டத்தில் பணிபுரிபவர்கள் உடனடியாக சிறுத்தையை அங்கிருந்து விரட்டினர்.



சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



சிறுத்தை தாக்கியதில் கன்று குட்டி மற்றும் தோட்டத்தில் உள்ள நாய் ஆகியவை லேசான காயங்களுடன் உயிர்தப்பின. காயம்பட்ட விலங்குகளுக்கு கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்து வருகிறார்.

குடியிருப்பு பகுதிக்கு அருகில் சிறுத்தை நடமாடுவதால் அச்சமடைந்த பொதுமக்கள், அதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...