கோவையில் பல்வேறு பகுதிகளில் கனமழை: போக்குவரத்து நெரிசல்

கோவை ரேஸ்கோர்ஸ் மற்றும் சிங்காநல்லூர் பகுதிகளில் கனமழை காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.


கோவை: கோவையில் இன்று (அக்டோபர் 11) பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ரேஸ்கோர்ஸ் பகுதியில் பெய்யும் மழையின் காரணமாக நான்கு சக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் நெடுந்தூரம் வரிசையில் நிற்கின்றனர். இதனால் இப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து காவல்துறையினர் வந்தால் மட்டுமே போக்குவரத்தை சரி செய்ய முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.



சிங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலாக கரு மேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசி வந்த நிலையில், தற்போது திடீரென கனமழை பெய்து வருகிறது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

திடீர் மழையால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். பலர் தங்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு மழைக்காக ஒதுங்கி நிற்கின்றனர்.

மழை தொடர்ந்து பெய்து வருவதால், வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த காவல்துறையினரின் உதவி தேவைப்படுவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...